Skip to content
Home » போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

திருச்சி  அடுத்த எட்டரை    இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜப்பிரியா(35).  தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும்  தஞ்சையை சேர்ந்த   போலீஸ்காரர் கார்த்திக் என்பவருக்கும்    முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் காதலாக கனிந்தது. இருவரையும்  சாதி என்ற தடுப்பு சுவர் பிரித்தாலும்  அளவு கடந்த காதல் அந்த தடுப்புகளை  கடந்து சென்றது. இப்படியாக 2 வருடங்கள்  ஓடியது.

கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம்  சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவலர் குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கணவரை பிரிந்து  தனது தாய் வீட்டில்ற்கு வந்த கஜப்பிரியா  அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கஜப்பிரியா சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 கடைக்குச் சென்றிருந்த    பெற்றோர்  திரும்பி வந்த போது கதவு உள்புறம் பூட்டியிருந்தது.  கதவை உடைத்து பார்த்தபோது கஜப்பிரியா  பிணமாக தூக்கிட்டு  தொங்கினார்.இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார்  வழக்குப்பதிவு செய்து வி்சாரணை நடத்தினர்.  ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தியும்  விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட ஆசிரியை 6 மாதத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்த  தற்கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!