Skip to content
Home » திருச்சியில் விஏஓ டூவீலரை திருடி சென்ற வாலிபர்கள்….

திருச்சியில் விஏஓ டூவீலரை திருடி சென்ற வாலிபர்கள்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய இருசக்கர வாகனத்திற்கு ஒரு தவணை 4 ஆயிரம் மற்றும் இரண்டு முறை செக் பவுன்ஸ் ஆனதற்கு ஒரு வருடம் கழித்து ரூ.36,000 பணம் கட்ட விலை என கூறி கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை உடைத்து எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் நிதி நிறுவன ஊழியர்களின்அடாவடியால் பொதுமக்கள் அதிர்ச்சி.

லால்குடி அருகே இடையாற்று மங்கலம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்.
இவரது மகன் சக்திகுமார்.இவர் சமயபுரம் அருகே வெங்கங்குடி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தனியார் திருமண மஹாலுக்கு இருசக்கர (பல்சர்) வாகனத்தில் சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை பார்த்தபோது காணவில்லை என தெரிய வந்ததை அடுத்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போது இரண்டு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சியை பார்த்த

போலீசார் உடனடியாக நம்பர் 1 டோல்கேட் சுற்றி பல்வேறு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, விஏஓ சக்திகுமாரின் வாகனத்தை திருடுவதற்கு உதவி செய்த லால்குடி அருகே கீழவாளாடி, கீழத் தெருவை சேர்ந்த சகாயராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது,
சக்திகுமார் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தை தனியார் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் வாங்கி உள்ளார். அதற்கு மாதம் தவறாமல் 4 ஆயிரம் தவணை செலுத்தி 2022 ம் ஆண்டு முடிந்துள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் காசோலை இரண்டு முறை பவுன்ஸ் ஆனதாலும், ஒரு தவணை 4 ஆயிரம் செலுத்தவில்லை என ஒரு வருடத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு 36,000 செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாகனத்தை பக்கவாட்டு பூட்டை உடைத்து எடுத்தது சூர்யா என்பவர் எனக் கூறியதைக் கேட்டு போலீசாரும் வாகனத்தின் உரிமையாளரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சகாயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிய தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர் கும்பகோணத்தைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள சூர்யா என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!