Skip to content

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரியலூர் அதிமுகவினர் எஸ்பியிடம் புகார்…

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும், திமுக IT பிரிவு செயலாளருமான அமைச்சர் T.R.B.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

கடந்த 17 -ஆம் தேதி X வலைதளத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து, அவதூறு பரப்பும் வகையில் திமுக சமூகவவைதள கணக்கில் கார்ட்டூன் வெளியிட்ட தொழில்துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான TRB.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரியலூரில் மாவட்ட அதிமுக சார்பில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் IPS அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் வந்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன், திமுக அரசு தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை மறைத்து மக்களை திசை திருப்ப இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்களை திரட்டி மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

error: Content is protected !!