தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நகை வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தவெக பிரமுகர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரி அளித்த புகாரின் பேரில் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சி என்ற போர்வையில் தவெகவினர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
