பெரம்பலூர்: குன்னம் அருகே தேரில் மின்சார கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆடி வெள்ளியையொட்டி தேரை கோயில் வளாகத்திற்கு இழுத்துச் சென்றபோது மின்கம்பி உரசியதில் அண்ணாதுரை, பரமசிவம் உயிரிழந்தனர். ராமு என்பவர் பலத்த காயமடைந்தார். தாழ்வான மின்கம்பியை உயர்த்தக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளித்துள்ளனர்.
