Skip to content
Home » அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் பொது மக்களிடையே வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் நான் முதலில் அதிமுக’வில் தான் இருந்தேன் சேவல் சின்னம் இருக்கும் போதே நான் பேசியவன். அந்த காலகட்டங்களில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இவர்கள் கட்சியிலேயே இல்லை என கூறினார். ஒரு லட்சம் பேருக்கு மேல் சுட்டு கொன்று வட்டு சோனியா காந்தி இங்கு மக்களிடம் ஓட்டு கேட்கிறார்கள். பல நேரங்களில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை நிறைய உதவிகளை செய்து இருக்கிறார் அந்த நன்றியை அவர் மறந்து விட்டார். இதுவே எடப்பாடி பழனிசாமிக்கு கடைசி தேர்தல் ஆக இருக்கும் என்ன பேசினார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவும் அதிமுக கட்சியை டைட்டானிக் கப்பல் போல வழி நடத்தினார்கள் ஆனால் தற்போது அந்த கப்பலை ஓட்டத் தெரியாமல் ஓட்டி உடைத்து விட்டார்கள் என்று பேசி தன் உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!