இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா!
சாபஹாரில் உள்ள IRGC கடற்படையின் இமாம் அலி தளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுவீச்சு.
சாபஹார், கொனாரக் பகுதிகளில் சுமார் 10 பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், இதனால் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
குவைத், பஹ்ரைன், கத்தார் நாடுகள் மீது ஈரான் ராணுவம் மீண்டும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் தொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வான்வழித் தாக்குதல் அபாய சைரன்களை ஒலிக்கச் செய்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
