தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வங்கிக்கணக்குளை பராமரித்து வருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பல்வேறு பலன்களை அடைந்து வருகின்றனர். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும்
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது மாநிலத்தில் உள்ள 23 மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ. வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு வங்கிகளிலும் இனி வரும் காலங்களில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இந்தியாவில் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் UPI வசதியை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு.