Skip to content
Home » ஐஏஎஸ் முதன்மை தேர்வு ரிசல்ட்…..1016 பேர் தேர்ச்சி….. தமிழகத்தில் டாக்டர் பிரசாந்த் முதலிடம்

ஐஏஎஸ் முதன்மை தேர்வு ரிசல்ட்…..1016 பேர் தேர்ச்சி….. தமிழகத்தில் டாக்டர் பிரசாந்த் முதலிடம்

  • by Senthil

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட உயரிய பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், 2023 ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய முறைப்படி நடத்தப்பட்டது.

2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 1016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆதித்யா  ஸ்ரீவஸ்தா இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.  தமிழக அளவில் டாக்டர்  பிரசாந்த் முதலிடம் பிடித்தார். இவர் அகில இந்திய அளவில் 78வது இடத்தை பிடித்துள்ளார். பிரசாந்த் சென்னை மருத்துவ கல்லூரியில் 2022ல் மருத்துவ படிப்பை முடித்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!