தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மிக் ஜாம் புயலால் தொடர் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தியது. அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரம பட்டு வருகின்றனர். இதை அடுத்து அஇஅதிமுக சார்பில் வால்பாறை சட்டமன்ற தொகுதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள்,தேங்காய் என அடங்கிய பொருட்கள் வால்பாறை சட்டமன்ற
உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் லாரி மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது,
இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜி.கே.சுந்தரம், கார்த்திக்அப்புசாமி,முன்னாள் M.L.A கஸ்தூரிவாசு,கோட்டூர் நகர செயலாளர் பாலு,ரெட்டியாரூர் செந்தில், பிரகதீஸ்,சந்திரகுமார், மூர்த்தி,சிவப்பிரகாஷ், மணிமாறன், கோ.தி. செல்வகுமார், அமுதாசிவக்குமார், சித்தூர்கோபாலகிருஷ்ணன். ரமேஷ், வால்பாறை செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.