Skip to content
Home » வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..

  • by Senthil

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறையில் இருந்து நேற்று மதியம் ராமன் மற்றும் பொன்னுதுரை ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் பொன்னுதுரை, ஜெயச்சந்திரன், ராமன், ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் கோடியாக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு பைபர் படகில் 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கி இவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துக்

கொண்டு 5 மீனவர்களையும் விரட்டி அடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக ஆறுக்காட்டுதுறை கடற்கரைக்கு இன்று காலை கரை வந்து சேர்ந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!