திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்திலேயே தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் முதலமைச்சர் விஜய் ஆட்சியை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது அவரால் எப்படி நாட்டின் பிரதமராக முடியும்? தமிழ்நாட்டைத் தனி நாடாகக் கேட்டு அதில் போட்டியிட்டால் மட்டுமே அவரால் பிரதமராக முடியும்” என விமர்சித்துள்ளார்.
