Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். நாளை (மார்ச் 15) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் (12 மற்றும் 19) விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விரிவான விளக்கம் அளித்திருந்தார்.மார்ச் 10-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியபோது, தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதால் 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் சிபிஐ அந்த கோரிக்கையை நிராகரித்து, மார்ச் 15 அன்று காலை கட்டாயமாக ஆஜராக வேண்டும் என்று உறுதியாக உத்தரவிட்டது.

விஜய் டெல்லி செல்வதை சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பாஜக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையாக சித்தரித்தன. “பாஜக தலைவர்களை சந்திப்பாரா?” என்ற வதந்திகள் பரவின.

இதற்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெளிவான மறுப்பு தெரிவித்தார்: “சிபிஐ விசாரணைக்கு ஆஜராக விஜய் டெல்லி செல்கிறார்; அதற்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை” என்று அவர் வலியுறுத்தினார்.இந்த மறுப்பு தவெக தனித்து போட்டியிடும் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக எந்த கூட்டணியிலும் இணையாமல் தனித்து நிற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய் நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!