Skip to content
Home » விஜய் ரசிகர்களால் இவ்வளவு ரூபாய் சேதமா? – ரோகினி தியேட்டர் அதிர்ச்சி தகவல்…

விஜய் ரசிகர்களால் இவ்வளவு ரூபாய் சேதமா? – ரோகினி தியேட்டர் அதிர்ச்சி தகவல்…

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நேற்று நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரை ரசிகர்களுக்காக சென்னை ரோகினி திரையரங்கில் திரையிட, திரையரங்கம் சார்பாக பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக விஜய் ரசிகர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாலை 4 மணியிலிருந்து திரையரங்கம் முன்பு கூடினர். பட்டாசு வெடித்தும், லியோ லியோ என கூச்சலிட்டும் ஆரவாரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு மேலாக ரசிகர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடியதால், இருக்கையின் மீது தாறுமாறாக ஏரி இருக்கைகளை நாசம் செய்தனர். இதனால் திரையரங்கில் பல இருக்கைகள் உடைந்து நாசமானது.

leo

இந்த நிலையில், லியோ பட டிரெய்லர் வெளியீட்டின் போது ஏற்பட்ட சேத விவரங்களை ரோகினி திரையரங்கம் வெளியிட்டுள்ளது. லியோ டிரெய்லர் வெளியீட்டின் போது சென்னை ரோகிணி திரையரங்கில் 400 இருக்கைகள் சேதமடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களால் 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரோகிணி திரையரங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!