Skip to content
Home » விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

  • by Senthil

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர்,  இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்   புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில்  அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

தற்போது அமலாக்கத்துறை சார்பில் புதுக்கோட்டை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்  விஜயபாஸ்கர்  மீதான குற்றப்பத்திரிகை நகல் தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே விஜயபாஸ்கர் மீதான விசாரணை மேலும் தீவிரமாகலாம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!