நெல்லை வி.எம்.சத்திரத்தில் விநாயகர் பிரியாணி சாப்பிடுவதுபோன்ற காட்சியுடன் கூடிய பதாகையை நிறுவிய பிரியாணி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதாகை வைத்ததாக செல்வராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை நடிவடிக்கை எடுத்துள்ளது. பிரியாணி கடை விளம்பரத்திற்காக விநாயகர் படம் பயன்படுத்தியதற்கு கைது செய்தது சரி என்றால், விநாயகரை சினிமாகாரர் போல சித்தரித்து சிலை செய்வது குற்றம் இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
