Skip to content
Home » சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின மூத்த தலைவருமான விஷ்ணு தியோ சாய் (59) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விஷ்ணு தியோ சாய் 4 முறை மக்களவை எம்.பி.யாகவும்,2 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர்.

விஷ்ணு தியோ சாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமன் சிங் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘குங்குரி எம்எல்ஏவும், பழங்குடியின தலைவருமான விஷ்ணு தியோ சாய் ஒருமனதாக முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையில் மோடியின் வாக்குறுதிகளை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதன் மூலம் மாநிலத்தில் முற்போக்கான மாற்றங்களை கொண்டு வர முடியும். இதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இரட்டை இன்ஜின் அரசு புதிய சாதனைகளை படைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!