தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி நீரை திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை என தமிழ்நாடு அரசு வாதிட்டது. மேலாண்மை வாரியம் பரிசீலிக்காவிட்டால், மீண்டும் ஆணையத்தில் முறையிட உத்தரவிடப்பட்டது.
