Skip to content
Home » மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

மனைவியை அனுப்ப மறுத்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பரபரப்பு..

  • by Senthil

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் கஸ்தூரிபாய் தெருவில் வசிப்பவர்கள் சரவணன் – மகாதேவி தம்பதியினர். இவர்களது 3வது மகளை மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். பிரபு தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் அழகாபுரியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பிரபுவிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவியை அழைத்து செல்ல பிரபு பலமுறை மாமியார் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. ஆனால், மாமியார் மகாதேவி, தனது மகளை பிரபுவுடன் அனுப்ப மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் மனைவியை அழைத்துச் செல்ல மாமியார் வீட்டிற்கு வந்த பிரபு இரவு அங்கேயே தங்கியுள்ளார். அதிகாலை, யாருக்கும் தெரியாமல் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பிரபு வெளியே செல்ல முயன்றபோது கண் விழித்த மாமியார் மகாதேவி கூச்சலிட்டு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை பலமுறை குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மகாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, காளையார் கோயில் காவல் நிலையத்திற்கு சென்ற பிரபு, நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட மகாதேவியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியாரை, மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!