Skip to content
Home » மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூரில் பனியன்  கம்பெனி நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த 2009 ம் ஆண்டு கற்பகவள்ளி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோமகன் என்ற 5 வயது மகன் இருக்கிறான்.

கற்பகவள்ளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கிட்னி செயலிழப்பு காரணமாக 2023 ம் ஆண்டு உயிரிழந்தார். அப்பொழுது கோபாலகிருஷ்ணன் என்னால் உன்னை காப்பாற்ற முடியாவிட்டால் உனக்காக கோயில் கட்டி ஊரையே உன்னை சாமியாக கும்பிட வைப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓராண்டுகள் முடிவுற்ற நிலையில் கற்பகவள்ளி புதைக்கப்பட்ட சொந்த இடத்தில் அவரது உருவப்படம் வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார் கோபாலகிருஷ்ணன். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

5 லட்சம் ரூபாய்  செலவில்  கோவில் கட்டிய   கோபாலகிருஷ்ணனை நவீன ஷாஜஹான் என அந்த பகுதி மக்கள் பாராட்டுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!