திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்த்தவர் சேட்டு. இவரது மனைவி அம்மாச்சி (59). இவர் நேற்று திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வள்ளுவர் நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அம்மாச்சியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்திவருகின்றன
