Skip to content
Home » 3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

தலைநகர் டில்லியின் டப்ரி பகுதியை சேர்ந்தவர் ரேணு (40). இவருக்கு திருமணமாகி கணவர், 3 குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக ரேணு அதேபகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். அப்போது, அதே ஜிம்மிற்கு வரும் ஆஷிஸ் (23) என்ற இளைஞருக்கும் ரேணுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆஷிஸ், ஒரு கட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான ரேணுவை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினாராம்.

இதை அறிந்து கொண்ட ரேணு,  ஆஷிசை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு  ரேணுதனது வீட்டின் வாசல் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு நடந்து வந்த ஆஷிஸ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் ரேணுவை சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரேணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் ஆஷிசை கைது செய்ய அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், ஆஷிஸ் தனது நாட்டுத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.  ஆஷிஸ் உடல் அவரின் வீட்டில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரேணுவை சுட்டுக்கொன்ற ஆஷிஸ் தானும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!