கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு பணியாற்றிய 23 வயது பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடு அரசு விளையாடுகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
