Skip to content
Home » நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு முடிவுக்கு வருகிறதா..?..

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு முடிவுக்கு வருகிறதா..?..

  • by Senthil

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த 2021ல் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணித்த போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் யாஷிகாவின் தோழி பவானி ஷெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாஷிகாவும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். தற்போது விபத்தில் இருந்து முழுமையாக தேறி வந்துள்ள யாஷிகா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு புறம், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கு நேரில் ஆஜரான நடிகை யாஷிகா, மாஸ்க், கூலர் அணிந்து தன் முகத்தை மறைத்தபடி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

ஆரம்பத்தில் இந்த வழக்கில் தனது உடல்நிலையை காரணம் காட்டி நீதிமன்றத்திற்கு வராமல் இழுத்தடித்த நடிகை யாஷிகா, தற்போது தன் முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறாராம். இதற்கு காரணம் சீக்கிரம் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காகதான்.

நீதிமன்றம் வந்த யாஷிகா
நீதிமன்றம் வந்த யாஷிகா

எதிர்தரப்பில் யாஷிகாவுக்கு எதிராக பெரிதும் எதிர்ப்பு இல்லை என்பதால் வழக்கு விரைவில் முடிய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மே 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!