திருச்சியில் தமிழ் மாநில யாதவ மகாசபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது….
தமிழ் மாநில யாதவ மகாசபை திருச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட உள்ளது. எனவே திருச்சி மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் அமைப்பாக பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாநில யாதவ மகாசபை துவக்கப்படுவதின் நோக்கம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்துவரும் யாதவர்கள் அரசியல் அரங்கில் தவிர்க்கமுடியாத சக்திகளாக வளர்ந்து வருவதை தடுக்க நினைக்கும் தீயசக்திகளை முறியடிக்கப்படும். யாதவர்கள் அரசியல் ரீதியாக உயர்பதவிகள், மேலும் மக்கள் தொகை அடிப்படையில் யாதவ சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய நாடாளுமன்ற சட்டமன்ற வேட்பாளர்கள் இடங்கள் பெற்றிட அயராமல் பாடுபடுவோம். தமிழகமெங்கும் வாழும் வசதிவாய்ப்பற்ற ஆனாலும் சிறப்பாக படிக்கக்கூடிய யாதவ மாணவ மாணவியருக்கு கல்வி உதவி செய்வோம். வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்குவோம்.
முன்னதாக பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில்…. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களின் ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை. இனி வரும் காலங்களில் யாதவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ஆதரவு கேட்கும் கட்சியினருக்கு தான் யாதவ சமுதாய ஓட்டு என கூறினார். பேட்டியின் போது மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், முத்துசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.