Skip to content
Home » வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 கோகுல். ( வயது 21) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும் திருப்பைஞ்சீலி பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அனைவரிடமும் நன்றாக பேசி வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இரவில் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்த போது மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுல் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!