கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜாகர் வயது( 21) தன்னுடைய காதலியுடன் நீர்வீழ்ச்சியை பார்க்க சென்றபோது தடுமாறி விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி மாயமானதை கடந்த ஐந்து நாட்களாக தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு உடல் கிடைக்காத காரணத்தினால் கைவிடப்பட்டது.
தற்போது இன்று அப்பகுதியில் பணிக்குச் சென்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அப்பகுதியில் பணியில்
ஈடுபடும் போது தண்ணீரில் உடல் மிதப்பது கண்டறிந்து உடனடியாக தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.