Skip to content
Home » நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

  • by Senthil

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் ஒச்சுக்காளை(31). இவரது மனைவி வெண்ணிலா (27) திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஒச்சுக்காளை உசிலம்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். வெண்ணிலாவின் அப்பா சின்னசாமி தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குதிரைவாலி பயிரிட்டுள்ளார். அறுவடைக்காக கதிரடிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அறுவடை நடைபெற்றது. நேற்று மாலை 4.30 மணியளவில் அறுவடை இயந்திரத்தில் பயிர்கள் பிரிக்கும் பகுதியில் வெண்ணிலா பணியில் ஈடுபட்ட போது திடீரென அவரது தலைமுடி இயந்திரத்தில் சிக்கிகொண்டது.

இதில் படுகாயமடைந்த அவர், அலறி துடித்தார். உடனடியாக இயந்திரம் நிறுத்தப்பட்டு மயங்கி விழுந்த வெண்ணிலாவை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வெண்ணிலாவின் சடலம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சிந்துபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!