உத்தரப் பிரதேசத்தில் ஆகாஷ் (20) என்ற இளைஞர், நள்ளிரவில் தனது காதலியின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, பெண்ணின் குடும்பத்தினரிடம் அவர் வசமாக சிக்கினார். இதையடுத்து, அவரை அப்பகுதியினர் தாக்கி, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மறுநாள் காலை காவல் நிலையத்தில், “ஆகாஷ் இல்லாமல் தன்னால் வாழ முடியாது” என இளம்பெண் கூறிய நிலையில், இரு குடும்பத்தினரும் சம்மதித்தினரும் சேர்ந்து அந்த ஜோடிக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தனர்.
