Skip to content
Home » கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

  • by Senthil

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர்  ஜெயபிரபு (39). இவரது மனைவி சுகன்யா (33).சுகன்யா ஏற்கனவே ராவுத்தன் மேட்டைச் சேர்ந்த குமார் என்பவரை மணந்து மணவாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவரிடம் இருந்து விலகி இருந்த நிலையில் 17 .9 .23 அன்று ஜெய பிரபுவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் 23 .1 .24 வீட்டை விட்டு வெளியே சென்ற சுகன்யா வீடு திரும்பவில்லை.ஜெய பிரபு அக்கம் பக்கம் என எல்லா இடத்திலும் தேடியும் சுகன்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது சுகன்யா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் சுகன்யா தனது கணவருடன் வாழ விருப்பமில்லை என எழுதியிருந்தார். இது குறித்து ஜெயபிரபு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு  சுகன்யாவை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!