Skip to content
Home » உச்சநீதிமன்ற அதிரடியால் பணிந்தார் கவர்னர்….பொன்முடி இன்று அமைச்சராகிறார்

உச்சநீதிமன்ற அதிரடியால் பணிந்தார் கவர்னர்….பொன்முடி இன்று அமைச்சராகிறார்

 பொன்முடியின் தண்டனை விதிக்கப்பட்ட ஐகோர்ட் தீர்ப்பை  உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.  எனவே பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். அதைத்தொடர்ந்து அவரை  அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கடிதம் எழுதினார். ஆனால் அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கில் அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்ற உத்தரவை ஆர்.என்.ரவி மீறி செயல்படுவதாக தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இன்றைக்குள் முடிவு எடுக்காவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம், ஆளுநரை எச்சரித்திருந்தது.  இன்று காலை வரை கவர்னரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இந்த நிலையில் திடீரென 11 மணி அளவில் கவர்னர் மாளிகையில் இருந்து முதல்வருக்கு  தகவல் அனுப்பப்பட்டது. அதில்  பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என கவர்னர் கூறி இருந்தார்.

திடீரென கவர்னர் அழைப்பு விடுத்தது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது,   கவர்னர் அரசியல் சாசனத்தை மீறும் வகையில் நடப்பது  இது முதல் முறை அல்ல. அடிக்கடி கவர்னர் ரவி பற்றி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புகார் செய்ததால்,  தலைமை நீதிபதி சந்திரசூட கடுமையாக கவர்னரை எச்சரித்தார். 24 மணி நேரம் கெடு விதித்த உச்சநீதிமன்றம் அதற்குள் கவர்னர் நல்ல முடிவு எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் என்றதால் கவர்னர் ரவியால்  வேறு வழியே இல்லாத நிலையில் அவர் பதவி பிரமாணத்திற்கு ஒப்புக்கொண்டு உள்ளார்.  கவர்னர் ரவிக்கு அடிக்கடி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து வருவது  இந்திய அரசியலில்  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்னரை பல முறை  உச்சநீதிமன்றம் கண்டித்தும், அவரை ஏன் மத்திய அரசு இன்னும் இதே பதவியில் நீடிக்கச்செய்கிறது என்ற கேள்வி இந்திய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  உச்சநீதிமன்றத்தின்  எச்சரிக்கைக்கு  பணிவதை தவிர  கவர்னர்  ரவிக்கு வேறு வழியே இல்லை என்பது இப்போது தெளிவாகி உள்ளது.

பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முன்வராததால் அவர் பதவி விலகுவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!