Skip to content
Home » தானியங்கி மது விற்பனை எந்திரங்கள்…. தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

தானியங்கி மது விற்பனை எந்திரங்கள்…. தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடை விதிக்க கோரிய சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் கடைகளுக்கு உள் தான் இந்த தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட உள்ளதாகவும் , 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது .  இந்த தமிழக அரசு விளக்கத்தை ஏற்று சென்னை ஐகோர்ட்டு தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!