கடலூர்: பண்ருட்டி அருகே தூய்மை பணியாளர் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாமூரில் தனியார் மருத்துவமனை தூய்மை பணியாளர் மகாதேவி வீட்டில் கடந்த 1-ம் தேதி நகை கொள்ளைபோனது. நகை கொள்ளையில் ஈடுபட்ட பிரகாஷ், ஐயப்பன், தினகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
