தமிழ் நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது. தமிழ்த் தேர்வு என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றிருந்தனர். ஆனால் ஆசிரியர்கள் வழக்கம் போல இந்த ஆண்டும் வினாத்தாளில் சிறு பிழை செய்து உள்ளனர்.
அதாவது 33 வது வினாவில் ‘ நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த ‘ என்று வருகிறது. இது பிழையான வினா. ‘பார்க்க எண்ணியிருந்த’ என்பதற்கு பதிலாக பண்ணியிருந்த என்று வந்துவிட்டது. இதை படித்து பார்த்த பெரும்பாலான மாணவர்கள் எழுத்துபிழை என்பதை அறியாமல் குழம்பி போய்விட்டனர். இது நம் பாடப்பகுதியிலேயே இல்லையே என்கிற அளவுக்கு சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.
எனவே இந்த பிழையான வினாவுக்குரிய மூன்று மதிப்பெண்ணை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் . பள்ளிக்கல்வித் துறை இதனை ரிசீலனை செய்து ஆவன செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.