Skip to content
Home » 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு…

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த உத்தாணியில் 9ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆன்மீக விழா நடந்தது. உத்தம விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப் பட்ட கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோவிலை அடைந்தது. இதையொட்டி கோலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது 10, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கு மாணவர்களைக் கொண்டே பொன்னாடை போர்த்தப்பட்டது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. இதில் பாபநாசம் உலக திருக்குறள் மைய செயலர் ஜெயராமன், பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், நாட்டாண்மைகள் உட்பட பங்கேற்றனர். கிருஷ்ண ஜெயந்தி இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணர் ஜெயந்தி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!