கீழடி: கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. 13 குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணி நிறைவடைந்து அறிக்கை சமர்ப்பித்த பிறகே 12-ம் கட்ட அகழாய்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
