Skip to content
Home » 10,12ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வினா விடை புத்தகம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

10,12ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வினா விடை புத்தகம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வினா  வங்கி,  விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.   நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று மாணவிகளுக்கு வினா வங்கி விடை புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை

தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் மாநகரம் தாந்தோணி மலை பசுபதிபாளையம் புறநகர்களில் அமைந்துள்ள 26 பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ மாணவிகளுக்கு வினா வங்கி விடை புத்தகங்களை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் உள்ள  129 பள்ளிகளில் 10 மற்றும் 12 ம் வகுப்பு  பயிலும் 16,908  மற்றும்  மாணவ மாணவிகளுக்கு இந்த வினா வங்கி விடை புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரசு தேர்வில் மாணவர்கள்  அதிக மதிப்பெண் பெறும் வகையில் இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!