Skip to content
Home » புதுகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம்…

புதுகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம்…

  • by Senthil

புதுக்கோட்டை இராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022-23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி” என்ற திட்டத்தில் உயர்க்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாமினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (26.06.2023) துவக்கி வைத்தார். மேலும்  “கல்லூரிக் கனவு” என்ற வழிகாட்டு கையேட்டினை மாணவ,

மாணவிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ)  பெ.வேல்முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் நல கி.கருணாகரன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!