Skip to content
Home » மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை….

மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், கட்டுமாவடி கடல் பகுதிகளில் சில தினங்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும் பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது அடிக்கடி நடக்கும். இந்நிலையில் கட்டுமாவடியை சேர்ந்த மீனவர் விஜய் மற்றும் செம்பியன் மகாதேவிபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ரகு ஆகிய 2 பேரும் குறைவான ஆழத்தில் மீன் பிடிக்கப்படும் பட்டி வலையில் மீன்

பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் அதிக எடை கொண்ட பெரிய மீன் சிக்கி இருந்தது. நினைத்து அதை எடுத்துப் பார்த்தபோது 15 கிலோக்கும் மேல் எடை கொண்ட ராட்சத ஆமை இருந்தது. இது தடை செய்யப்பட்ட உயிரினம் என்பதால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!