கேரளாவின் வயநாடு மாவட்டம் மனந்தவாடியில் உறவினர் வீட்டில் 19 வயது இளம்பெண் அலீனா உயிரிழந்த நிலையில் உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் காயங்களும் ரத்தக் கறைகளும் காணப்பட்டதால், மரணம் குறித்து மர்மம் நிலவுகிறது. 3 நாட்களுக்கு முன் உறவினர் வீட்டிற்கு வந்த அலீனா, இறப்பதற்கு முன் அலறியபடி ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
