Skip to content
Home » 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு

10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்…. ஆப்சென்ட்டை குறைக்க ஏற்பாடு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 வகுப்புக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள்  இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.  இன்று மொழித்தேர்வு நடக்கிறது.

இந்த பொதுத்தேர்வினை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். 12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை செய்துள்ளது.  பிளஸ்-2 தேர்வில் தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் ஆப்சென்ட் இல்லாமல் முழு அளவில் மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. எத்தனை பேர் இன்று ஆப்சென்ட் ஆகிறார்கள் என்பது மதியம் 1 மணி அளவில் தெரிந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!