கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி.
இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்ற போது குளித்தலை கலைமகள் தனியார் பள்ளி அருகே எதிரே வந்த கும்பகோணத்தில் இருந்து கோயமுத்தூர் நோக்கி சென்ற டாட்டா ஏசி சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்தில் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
குளித்தலை போலீசார் லோகநாதன் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உட்படுத்தி உள்ளனர்.
இதேபோல் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சக்தி நகரை சேர்ந்த பொறியாளர் செந்தில் குமார் இவரது மனைவி தேன்மொழி வயது 48. இவர் தனது தாயார் ஊரான வீரவள்ளிக்கு வந்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்காக திம்மாச்சிபுரம் பேருந்த நிலையத்தில் பேருந்தில் ஏறுவதற்காக சாலையை கடந்த போது கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பெண்மீது மோதியதில் சம்பவ இடத்தில் தேன்மொழி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் தேன்மொழியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உட்படுத்தி உள்ளனர்.
குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
