சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து சரவணனை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்களை தாக்கிவிட்டு ரவுடி முத்து சரவணன்தப்பிச் செல்ல முயன்றார். இதனால், போலீசார் தற்காப்புக்காக தனது கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் ரவுடியை சுட்டனர். இதில்உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முத்து சரவணன் உயிரிழந்தார்.
என்கவுன்ட்டரில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ரவுடிகள் தாக்கியதில் 3 காவலர்கள் காயம்அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்கள், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நறடத்தினர்.
இவர்கள் அதிமுக பிரமுகா் கொலையில் தேடப்பட்டு வந்தவர்கள். கொலை செய்து விட்டு இவர்கள் டில்லியில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அ்ங்கு சென்று போலீசார் இவர்களை கைது செய்து அழைத்து வந்தபோது இந்த என்கவுன்டர் நடந்துள்ளது.