புதுடெல்லி: பாலஸ்தீனப் பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 தமிழர்கள் உட்பட இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இண்டிகோ சிறப்பு விமானம் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. டில்லி வந்தடைந்துள்ள தமிழர்கள் அனைவரும் உரிய தங்குமிடம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, இன்றிரவு சிறப்பு இணைப்புகள் மூலமாகத் தாயகமான சென்னைக்குத் திரும்புகின்றனர்.
