தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் மேலும் 3 படிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு ஏற்கனவே பழங்காலச் செங்கல் படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் படிக்கிணற்றின் இந்தப் புதிய படிகள் வெளிவந்துள்ளன.
