பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் ‘அதிக அளவு சர்க்கரை’, ‘உப்பு’, ‘செறிவூட்டப்பட்ட கொழுப்பு’ என்ற சிவப்பு நிற எச்சரிக்கை லேபிளை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பாக்கெட் உணவுகளை வாங்குவதற்கு முன்பே அதன் ஊட்டச்சத்து ஆபத்துகளை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
