சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மகாதேவி, தாம்பரம்-மதுரை கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, அவரிடம் இருந்த சுமார் 26 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் அடங்கிய பையை காணவில்லை என கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் அளித்தார். மதுரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வயதான தம்பதி ஒருவர் மகாதேவியின் பையுடன் மற்றொரு ரயிலில் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த தம்பதியிடம் இருந்து 2 மணி நேரத்திற்குள் 26 பவுன் நகையை மீட்டனர்.
