நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் உழக்குடி அருகே மேற்கொண்ட கள ஆய்வில், 3,000 ஆண்டுகள் பழமையான அரிய பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள நெடுங்கல் அருகே அந்துப்பூச்சி உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடு மற்றும் கலைநுட்பம் மிகுந்த பானை மூடித் துண்டு கண்டறியப்பட்டது. இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
