Skip to content
Home » இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

  • by Senthil

ஹமாஸ், இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது.  25-வது நாளாக  இன்றும் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களை  சேகரிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பத்திரிகையாளர்களை அனுப்பி வைத்துள்ளன. எனினும் போரால், அதில் சிக்கி இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. அந்த 31 பத்திரிகையாளர்களில் 26 பேர் பாலஸ்தீனர்கள் ஆவர். இவர்களை அடுத்து 4 இஸ்ரேல் நாட்டினர் மற்றும் ஒரு லெபனான் பத்திரிகையாளரும் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, பத்திரிகையாளர்களில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் காணாமலோ அல்லது சிறை பிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!