Skip to content
Home » கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக சிறுமுகை யில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையில் மேடூர் என்ற இடத்தில் தரைப்பாலம் மற்றும் இணைப்பு சாலை ஆகியவை தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு தான் இது

மாதிரியான மழை பொழிவு இருந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் கன மழை பெய்துள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன போக்குவரத்து முழுவதும் துன்டிக்கபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அத்துடன் மேடூர் மற்றும் அண்ணா நகர் இடையே உள்ள கிராம சாலை வெள்ளத்தில் அடித்து செல்லபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!